அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 25 June 2013

தூய்மையான 31 கிராமங்களுக்கு விருது, ரூ.5 லட்சம் பரிசு: ஜெயலலிதா வழங்கினார்

சென்னை: 2011-2012ஆம் ஆண்டுக்கான தூய்மையான கிராம இயக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான பரிசுகளையும், விருதுகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (25ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டும், சுற்றுசூழல் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கிய "தூய்மையான கிராம இயக்கம்" என்ற திட்டத்தை  முதல்வர் ஜெயலலிதா 2003ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்.

2011ஆம் ஆண்டு ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முழுமையான சுகாதார கிராமங்களை உருவாக்குகின்ற வகையில் "தூய்மையான கிராம இயக்கம்" திட்டத்தினை செயல்படுத்திடவும், இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு தூய்மையான கிராம ஊராட்சியைத் தேர்ந்தெடுத்து, அந்த கிராம ஊராட்சிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசும், "தூய்மையான கிராம இயக்கம்" என்ற விருதும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, 2011-2012ஆம் ஆண்டுக்கான தூய்மையான கிராம இயக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் - முடிச்சூர்,  திருவள்ளூர் மாவட்டம் - பாப்பரம்பாக்கம், கடலூர் மாவட்டம் - நாட்டார்மங்கலம், விழுப்புரம் மாவட்டம் - மொளசூர், வேலூர் மாவட்டம் - வேப்பங்குப்பம், திருவண்ணாமலை மாவட்டம் - வடமாத்தூர், சேலம் மாவட்டம் - பக்கநாடு,

நாமக்கல் மாவட்டம் - பச்சுடையாம் பாளையம், தருமபுரி மாவட்டம் - சில்லார ஹள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம் - பெண்ணேஸ்வர மடம், ஈரோடு மாவட்டம் - அட்டவணை அனுமன்பள்ளி, திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கள்ளிப்பாளையம், நீலகிரி மாவட்டம் - கோடநாடு, தஞ்சாவூர் மாவட்டம் - ரெகுநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் - வடகரை, திருவாரூர் மாவட்டம் - ஆவூர்,

கரூர் மாவட்டம் - வாங்கல்குப்பிச்சிப் பாளையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - பழூர், பெரம்பலூர் மாவட்டம் - பெரியவடகரை, அரியலூர் மாவட்டம் - மேலணிக்குழி, புதுக்கோட்டை மாவட்டம் - கொப்பனாப்பட்டி, மதுரை மாவட்டம் - ரெங்கபாளையம், தேனி மாவட்டம் - கோவிந்தநகரம், திண்டுக்கல் மாவட்டம் - என். பஞ்சம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் - கும்பரம், விருதுநகர் மாவட்டம் - நல்லமநாயக்கன்பட்டி,
சிவகங்கை மாவட்டம் - வெற்றியூர், திருநெல்வேலி மாவட்டம் - நல்லூர், தூத்துக்குடி மாவட்டம் - நட்டாத்தி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் - மாங்கோடு ஆகிய 31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ஜெயலலிதா  இன்று தலைமைச் செயலகத்தில், தலா 5 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினையும், "தூய்மையான கிராம இயக்கம்" விருதுகளையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார் என்று கூறப்பட்டுள்ளது.


news.vikatan thanks

No comments:

Post a Comment