அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 25 June 2013

டிவி விழுந்து குழந்தை பலி


.
  சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு வீட்டில், தலையில் டிவி விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பெற்றோரின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அடுத்துள்ள பெருங்குடி வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலாதாஸ்(வயது 35), இவரது மனைவி ஸ்ரீதேவி(வயது 30). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டு முன் திருமணம் நடந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு சஞ்சனா என பெயரிட்டுள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்தபோதிலும் பெரிய அளவு கொண்ட தொலைக்காட்சி பெட்டியை வாங்கி பார்த்து வந்துள்ளனர். அந்த பெட்டியை வைத்திருந்த ஸ்டேண்ட் மிகவும் பழுதடைந்தது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு குழந்தை சஞ்சனா, டிவி ஸ்டேண்டை பிடித்து விளையாடியுள்ளது. அப்போது குழந்தையின் தலையில் டிவி விழுத்ததால் துடிதுடித்துள்ளது. இதையறித்த அவரது தாய் ஸ்ரீதேவி என்ன செய்வதென்று தெரியால் துடியாய் துடித்தார். உடல் முழுவதும் படுகாயமடைந்த குழந்தை சஞ்சனாவை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை துடிதுடித்து இறந்துள்ளது. பெற்றோரின் அலட்சியப்போக்கால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

news maalaisudar thanks

No comments:

Post a Comment