TUESDAY, 25 JUNE 2013 08:56
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என பாதுகாப்பு படையினர் த்ஹெரிவித்துள்ளனர்.
இன்று காலை 3க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள், அதிபர் மாளிகை நுழைவாயில் அருகே வந்து திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், திருப்பி தாக்குதல் நடத்தியதில், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், இந்த தாக்குதலில், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ காயம் துவும் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு உடனடியாக தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதலில் பங்கேற்ற ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்துள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம், நேடோ கூட்டுபடை தலைமைக் காரியாலயம் என்பனவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இத்தாக்குதலுக்கு உடனடியாக தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதலில் பங்கேற்ற ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்துள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம், நேடோ கூட்டுபடை தலைமைக் காரியாலயம் என்பனவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
news 4tamilmedia thanks
No comments:
Post a Comment