அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 25 June 2013

கெதர்நாத் மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தன : இனிமேல் தேடுதல் தொடரப்படமாட்டாது?


உத்தர்காண்ட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலிருந்தும் தேடுதல் பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு மேல் எவரும் உயிருடன் ஆபத்தான நிலையில் மீட்கப்படக்கூடிய சாத்தியம் இல்லை என்பதனால் தேடுதல் பணிகள் தொடரமாட்டாது எனவும் இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கெதர்நாத் பகுதியில் இனிமேல் எந்தவொருவரும் ஆபத்தான நிலையில் தங்கியிருக்க வாய்ப்பில்லை. அனைவரையும் வெற்றிகரமாக வெளியெற்றிவிட்டோம் என ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படைக் குழுவின் தலைவர் ரவிநாத் ராமன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சோன் பிரயாக்கில் NDRF படையினர் மாத்திரம் நிலை கொண்டுள்ளனர். ஏனைய அனைவரும் அங்கிருந்து 25 கி.மீ தூரம் உள்ள குப்ட்காஷிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை மீட்பட்ட சடலங்களை நல்லடக்கம் செய்யவேண்டிய பணிகளை இனிசெய்ய வேண்டியிருப்பதாகவும் ஆனால் கெதரினாத்தில் தொடரும் கடும் மழை இன்னமும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் கடும் சவாலை எதிர்கொள்வதாகவும் த்ரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை கிடைத்துள்ள சடலங்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

news 4tamilmedia thanks

No comments:

Post a Comment