சிம்லா, ஜூலை.28–
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள கேகர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரகுபீர் சிங். மாநில கால்நடை துறையில் துணை இயக்குனராக இருக்கிறார். இவருடைய தம்பி முரளி லால். இவர் வக்கீலாக இருக்கிறார்.
இவர்களுடைய தாயார் பெயர் ரேஷ்மி தேவி (வயது 91). இவருடைய கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு தாயாரை கவனிக்க மகன்கள் விரும்பவிலலை.
இதனால் அவரை ஒரு இருட்டறையில் அடைத்து வைத்தனர். 6 வருடமாக அவர் அந்த அறையிலேயே இருந்தார். எப்போதாவது ரோட்டியை அவருக்கு உணவாக கொடுப்பார்கள். அதை சாப்பிட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாமல் அறையிலேயே முடங்கி கிடந்தார்.
தங்கியிருந்த அறையிலேயே இயற்கை உபாதைகளையும் கழித்தார். இதனால் மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசிய நிலையில் அந்த அறையில் இருந்தார். அதுமட்டும் அல்லாமல் மகன்கள் இருவரும் தாயரை அடிக்கடி அடித்து உதைத்து வந்தனர்.
இதுபற்றி சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சென்று அவரை மீட்டனர். பின்னர் அவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
அவருடைய மகன்கள் மீது சட்டப்படி புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று சமூக நல அதிகாரிகள் கூறினார்கள்.
No comments:
Post a Comment