தமிழகத்தின் நெய்வேலி அரசு பெண்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் மாணவிகள் சாதம் மற்றும் முட்டை சாப்பிட்டுள்ளனர்.
மதிய உணவில் பல்லி விழுந்ததா அல்லது விஷ பொருள் எதுவும் கலப்படம் ஆனதா என்றும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் யாருக்கும் அபாயக்கட்டம் இல்லை என்றும் , பெரும் பாதிப்பு இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் கிர்லோஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் மாண, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரு ஷெகாத் யோஜானா என்ற சமூக நலத்துறையினர் மூலம் சத்துமாத்திரை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் பாரத்நகர் பகுதி அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலர் மயக்கமுற்றனர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 22 பேர் பலியாயினர்.
இதனையடுத்து இந்த மாநிலத்தில் மதிய உணவு பரிமாறும் போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமையல் காரர்கள் முதலில் சாப்பிட்டு பார்த்து பின்னர் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
newindianews thanks |
No comments:
Post a Comment