அக்டோபர் 01, 2014,
உத்தபிரதேச மாநிலம் கோரக்பூரில் விரைவு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
வாரணாசியில் இருந்து கோரக்பூர் சென்றுகொண்டிருந்த கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயில், லக்னோவில் இருந்து பரூனி நோக்கி சென்றுகொண்டிருந்த பரூனி எக்ஸ்பிரஸ் ரயில் மீது இரவு சுமார் 11 மணிக்கு மோதியது. கிரிஷாக் ரயில் வேகமாக மோதியதால், பரூனி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறின. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து கோராக்பூர்-வாராணாசி பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment