அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

காந்தி ஜெயந்தி தினத்தன்று ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்:மனித வள மேம்பாட்டுத்துறை


TUESDAY, 30 SEPTEMBER 2014 10:37


அக்டோபர் 2ம் திகதியான காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று மனித வளத்துறை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. காந்தி பிறந்தநாளான அன்றைய தினத்தில் தூய்மையான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மனித வள மேம்பாட்டு துறைகளான பள்ளிக் கல்வித்துறை, மற்றும் உயர் கல்வித்துறையை சேர்ந்த அனைத்து உயரதிகாரிகள் மற்றும் தலைவர்கள், ஊழியர்கள் தவறாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று சுற்றிக்கை அனுப்பியுள்ளது.


அதுமட்டுமின்றி பணிக்கு வருகிறோம் என்பதை அனைத்துறை சார்ந்த தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும், மனித வள மேம்பாட்டுத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், காந்தி ஜெயந்தி அன்று காலை 9 மணி 45 நிமிடங்களுக்கு பணியிடத்தை தூய்மையாக வைத்திருப்போம் என்கிற உறுதி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் பணியாளர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தூய்மையான இந்தியா எனும் திட்டப்பணியை முதலில் மத்திய மனித வளத்துறையிலிருந்து துவங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

4tamilmedia thanks

No comments:

Post a Comment